அக்பர்

அக்பர்  / Akbar (Tamil Edition) by [என். சொக்கன் / N. Chokkan]

பதிமூன்று வயதில் அக்பர் ஆட்சியில், அமரவைக்கப்பட்டார். ஆட்சி நிறைவடையும்போது, பெரும்பாலான வடக்கு மற்றும் மத்திய இந்தியா முகலாயப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக வந்து சேர்ந்திருந்தது. வீரத்தின் விளைவாக மட்டுமே பெறப்பட்டது அல்ல இந்த வெற்றி.

மிகச் சிறந்த போர்வீரராக இருந்த அதே சமயம், இளகிய மனம் கொண்டவராகவும் கனிவானவராகவும் அக்பர் திகழ்ந்தார். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மத்தியில் இவர் அளவுக்குப் பரந்த மனமும் மதச் சகிப்புத்தன்மையும் கொண்ட இன்னொருவர் இல்லை.

எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றபோதும் அக்பர் அளவுக்குப் புத்தகங்களை ஆர்வத்துடன் சேகரித்த, நுணுக்கமாகக் கலைகளை ஆதரித்த இன்னொருவரைக் காண்பது அரிது.

முகலாய மன்னர்களில் சிறந்தவராகவும், இந்தியாவை ஆண்ட சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராகவும், உலக அளவில் தலை சிறந்த மன்னராகவும் அக்பர் திகழ்வதற்குக் காரணம், அவருடைய அசாதாரணமான வாழ்க்கை.

இந்தப் புத்தகம் அக்பர் குறித்த ஓர் எளிய அறிமுகத்தைச் சுவையான முறையில் அளிக்கிறது.