கடலும் ஆறும்

மூன்றாம் பிறை‘ படத்தில் வரும் ‘பூங்காற்று புதிதானது‘ பாடலில் வரும் வரிகள் இவை:

நதி எங்கு செல்லும்?

கடல்தன்னைத் தேடி.

பொன்வண்டு ஓடும் மலர் தேடி.

என் வாழ்வில் நீ வந்தது விதியானால், (மலருக்கு வண்டுபோல், கடலுக்கு ஆறுபோல்)
நீ எந்தன் உயிர் அன்றோ!

ராஜாவின் 4 வரி, 20 சொல் சரணத்தில் விரிவாகக் கதை பேச இடமே இல்லை. ஆனாலும் அந்த நாயகனின் உள்ளக்கிடக்கையை எவ்வளவு ஆழமான வாதமாகக் கண்ணதாசன் உட்காரவைத்திருக்கிறார் பாருங்கள்! சொற்சிக்கனமும் கட்டுக்கோப்பும் மெட்டுக்கிணக்கமும் எவ்வளவு இனிமை!

Image Courtesy: Wikipedia

இதே இயக்குநர், இசையமைப்பாளருடைய வேறொரு படத்தில் (சதி லீலாவதி) வேறொரு பாடலில் (மகராஜனோடு ராணி) இதே கடல், ஆறு உவமையை வாலி இப்படிப் பயன்படுத்தினார்:

கங்கைக்கொரு வங்கக் கடல்போல்
அவன் வந்தான்.

அந்தப் படத்தில் நாயகனுக்கு 2 நாயகிகள். கங்கைக்கு ஒரு வங்கக் கடல்தான், ஆனால் வங்கக் கடலில் பல ஆறுகள் கலக்கும்.

கண்ணதாசனின் பாட்டுத் தலைவனும் கடல்தான். ஆனால் ஒரே ஆற்றை உயிரெனக் கொள்ளும் கடல்!

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *