இணையத் தகவல் தொடர்பு நல்விதிகள்

1

இணைப்புகளை(முக்கியமாக வீடியோ இணைப்புகளை)ப் பகிர்ந்துகொள்ளும்போது ஒரு வரி அறிமுகமேனும் எழுத மறவேல்

2

யாருக்கேனும் எதையேனும் அனுப்பிவிட்டுப் பத்தாவது விநாடியில் பதில் எதிர்பாரேல்

3

இரண்டு நாளாகியும் பதில் வராவிட்டால் ஏன் பதில் இல்லை என்று நினைவுபடுத்த மறவேல்

4

இரண்டு முறை நினைவுபடுத்தியபிறகும் பதில் வராவிட்டால், பதில் சொல்ல விருப்பமில்லை என்று புரிந்துகொண்டு சும்மா இருக்காமல் திரும்பத் திரும்பத் தொந்தரவு செய்யேல்

5

காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கத்தாலெல்லாம் நல்லுறவு வளரும் என்றெண்ணேல்

Image by Gerd Altmann from Pixabay

6

குறிப்பாக, பூக்கள், இயற்கைக் காட்சிகளின் படம் போட்ட காலை வணக்கங்களை அனுப்புவதால் கடுப்புதான் வளரும் என்பதை மறவேல்

7

அப்துல் கலாம், ரூமி, சுந்தர் பிச்சை பொன்மொழிகளை யாருக்கும் அனுப்பேல்

8

பிறர் எழுத்துகளை வேறு எங்கேனும் காபி, பேஸ்ட் செய்யும்போது வேண்டுமென்றே, அல்லது தற்செயலாக அவர்கள் பெயரைச் சேர்க்க மறவேல்

9

ஆராயாமல் எதையும் ஃபார்வர்ட் செய்யேல்

10

இணையக் குழுக்களின் மைய நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அவற்றில் சேரேல்

10அ

அப்படிப் புரிந்துகொள்ளாமல் சேர்ந்துவிட்டாலும், அங்கு எதையெதையோ பதிவு செய்து படுத்தேல்

(தொடரலாம்)

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *